ஆலய திருப்பணி நிதிக்கு 50 ஆயிரம் வெள்ளி மானியம் வழங்கினார் ...இயோ பீ யின்.

A grant of 50,000 shillings was given to the temple repair fund by Yb, Yeo Pei Yin

ஆலய திருப்பணி நிதிக்கு 50 ஆயிரம் வெள்ளி மானியம் வழங்கினார் ...இயோ பீ  யின்.

19 Sept 2024 - ஆலய திருப்பணி நிதிக்கு 50 ஆயிரம் வெள்ளி மானியம் வழங்கினார் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பீ  யின்.

நூறாண்டுக் கால வரலாற்றைக் கொண்ட செர்டாங் பூமலை அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் (1923) ஆலய திருப்பணிகள் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு  Yeo bee Yin  50 ஆயிரம் வெள்ளி மானியம்  வழங்கினார்.

முன்பு அதிகமான இந்தியர்கள் வசிக்கும் இடமாகவும் இருந்ததால்   இதற்கு 'செர்டாங் பூமலை' என்று பெயர்  வைத்து அழைத்ததாகவும் இங்குள்ள செர்டாங் தமிழ்ப்பள்ளி 1936 ஆம் ஆண்டில் தொடங்கியது என்றும் இந்தப்பள்ளியில் தாம் படித்ததையும்   முருக பக்தரான முருகனடிமை திரு.காசாம்பு வயது 72 நினைவு கூர்ந்தார்.

அதிகமான இந்தியர்கள் செர்டாங் ஆய்வு  நிலையம் FES , MARDI, UPM, ஆகியவற்றில் அரசாங்க வேலையில்  இருந்தனர்.

தமிழ்ப்பள்ளிக்கு  அருகில் ஸ்ரீ சிவ சுப்ரமணியர் ஆலயம் உள்ளது.
செர்டாங் பூமலையில் நம்மவர்கள் இல்லை  என்றாலும் திருவிழா காலத்தில் இந்த இரண்டு ஆலயத்திற்கும் பக்தர்கள் வருவது குறைய வில்லை.

 அதிர்ஷ்டக்குலுகல் வெற்றியாளரருக்கு ஆலயத் தலைவர்  எம்.பவளமணி, காஜாங் அரசு பல் மருத்துவமனை உரிமையாளர் ஆலய அறங்காவலர் டாக்டர் அரசு  அவர்களும் பரிசுகளை எடுத்து வழங்கினர்.