டத்தோஸ்ரீ சுந்தராஜு ஏழுவர் காற்பந்தாட்ட போட்டி

Datuk Sri Sundaraju Sevens Football Tournament

டத்தோஸ்ரீ சுந்தராஜு ஏழுவர் காற்பந்தாட்ட போட்டி
டத்தோஸ்ரீ சுந்தராஜு ஏழுவர் காற்பந்தாட்ட போட்டி

News By:Selvamsadayan

10Sept 2024-  முன்னாள் பிறை ரொவஸ் காற்பந்தாட்ட குழுவின் ஏற்பாட்டில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் முறையாக வட்டாரத்தில் உள்ள நான்கு தமிழ்ப் பள்ளிகளை சேர்ந்த ஆண் பெண் இருபாலருடன் 26 தனியார் கிலாப்புகள் கலந்துக் கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.

நிகழ்வை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வெற்றியாளருக்கு பரிசுகளை எடுத்து வழங்கினார் பிறை சட்டமன்ற உறுப்பினர் 
ஒய் பி சுந்தராஜு சோமு.

தலைவர் சிவனேசன் கூறுகையில் ரொவஸ் கிலாப் துவங்கிய நாள் iமுதல் இன்று வரை சமூதாய சார்ந்த நிகழ்வுடன் கலாச்சார நிகழ்வுகளும் நடத்தி வருகிறது என்றார்.

இந்த காற்பந்தாட்ட போட்டிக்கு பிறை சட்டமன்ற உறுப்பினர் சுந்தராஜு சோமு நிதியுதவியுடன் பல் வேறு அடிப்படை உதவிகளும் செய்துக் கொடுத்துள்ளார் என்று திரு சிவனேசன் கூறினார்.

பிறை டிஎன்பி திடலில் அதன் அதிகாரி மற்றும் ஊழியர்களுடன் பணியாளர்கள் காலை முதல் மாலை வரை ரொவஸ் காற்பந்தாட்ட குழுவின் ஒத்துலைப்புடன்  ஈடுபட்டனர்.

இந்த காற்பந்தாட்டப் போட்டி வெற்றி பெற்ற பல நல்ல உள்ளங்கள் கை கொடுத்தனர் என்பதால் அனைவருக்கு நினைவு சின்னங்கள் வழங்கி மரியாதை செய்யபட்டது.வெற்றிப் பெற்றவர்களுக்கு சின்னங்கள் அனிவித்து வெற்றி கோப்பைகளை தந்து உற்சாகம் கொடுக்கபட்டது.