மனித நேய உதவிகளை வழங்கி வரும் ஜி.குமார்.

G. Kumar who has been providing humanitarian aid.

மனித நேய உதவிகளை வழங்கி வரும் ஜி.குமார்.

News by: RM.Chandran

02 Sept 2024 - ஜொகூர் ஸ்ரீ ஆலம் பகுதியில் வசிக்கும் சாய் ஜீவிதாஸ்ரீ'யின் இல்லத்திற்குச்சென்ற சமூகச் சேவையாளர் ஜி. குமார், குழந்தையின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறியவர், மூளை கட்டியால் பாதிக்கப்பட்டிருக்கும் சாய் ஜீவிதாஸ்ரீ  வயது 6  குழந்தையின் சிகிச்சைக்கு 1,100.வெள்ளி நன்கொடை வழங்கியதை குறிப்பிட்டார்

.

வசதி குறைந்த நிலையில் வாழும் சிலர், இவ்வாறான நோயினால் பாதிக்கப்பட்டு சிரமங்களை எதிர் நோக்கும் போது  அத்தகையோர அடையாளம்  கண்டு அவர்களுக்கு உதவிகளை செய்வதற்கு தம்மோடு சேர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வரும் அனைவருக்கும் நன்றி கூறினார்

.

சாய் ஜீவிதாஸ்ரீ வுக்கு இந்த மனித நேய உதவிகளை வழங்குவதற்கு தம்மோடு சேர்ந்து உதவி கரம் நீட்டிய தம்போய்  ஸ்ரீ சுப்ரமணியர் கோயில் தலைவர் திரு.ஆறுமுகம், திரு. திருமதி வெங்கட் திலா 
(VS போக்குவரத்து சேவைகள்) திரு.நாகப்பன் திரு. மகேன் ஆகியோருக்கு ஜொகூர் ஜி.குமார் நன்றி தெரிவித்துக்கொண்டார்.