ஜொகூர் இந்தியர்களுக்கு அரசாங்க வேலை வாய்ப்பு அதிகரிக்கப்பட வேண்டும் , டாக்டர் ராஜகோபால்.

Govt job opportunities should be increased for Johor Indians, Dr Rajagopal

ஜொகூர் இந்தியர்களுக்கு அரசாங்க வேலை வாய்ப்பு அதிகரிக்கப்பட வேண்டும் ,  டாக்டர் ராஜகோபால்.

News By : RM Chandran Date : 20 August 2024

ஜொகூர் இந்தியர்களுக்கு அரசாங்க வேலை வாய்ப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூறினார்
 இந்தியர் சமூக நல மன்றத்தலைவர் டாக்டர் ராஜகோபால்.


தாமான் ஸ்ரீ சௌஜானா இந்தியர் சமூக நல மன்றம் தேசிய தினத்தை முன்னிட்டு ஓர் அணிவகுப்பை தஞ்சோங் ஸ்ரீ  தங்கும் விடுதியில் ஏற்பாடு செய்தாகக் கூறினார்,  தாமான்ஸ்ரீ  சௌஜனா இந்தியர் சமூக நல மன்றத்தலைவர் டாக்டர்   ராஜகோபால்.

தேசிய தின கீதம் முழங்க அனைவரும் ஜாலூர் கெமிலாங் தேசிய கொடியை ஏந்தி அணிவகுப்பு  மேற்கொண்டதுடன்
கிளைச்செயலாளர் ஏ.சுகுணா, ஜொகூர் மந்திரி பெசாருக்கு 
வாழ்த்துகளை கூறினார்.
இதனிடையே ஜொகூரில் இந்தியர்களின் அரசாங்க வேலை வாய்ப்புகள் குறைவாக உள்ளது. அதனை ஜொகூர் மந்திரி பெசார் கவனத்தில் எடுத்துக்கொள்ளுமாறு  இந்தியர சமூக நல மன்றம் கேட்டுக்கொள்வதாகத் அதன் தலைவர் டாக்டர் ராஜகோபால்
தெரிவித்தார்.