சிலாங்கூர் பிரீமியர் லீக் கிண்ண இறுதியாட்டத்திற்கு ஸ்ரீ மூடா, புத்ரா பெர்வீரா குழு தேர்வு
Mr Mooda, Putra Pervira team selected for Selangor Premier League Cup final

11 August 2023
சிலாங்கூர் மாநில கால்பந்து சங்கத்தின் (எஃப்.ஏ.எஸ்.)
ஏற்பாட்டில் நடைபெறும் 2023 பிரீமியர் லீக் கிண்ண போட்டியின்
இறுதியாட்டத்திற்கு ஷா ஆலம், தாமான் ஸ்ரீ மூடாவைச் சேர்ந்த புத்ரா
பெர்வீரா குழு தேர்வாகியுள்ளது.
இம்மாதம் 5ஆம் தேதி இங்குள்ள புக்கிட் ஜெலுத்தோங் அரங்கில்
நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் எஸ்.ஏ. யுனைடெட் குழுவை 3-0 என்ற
கோல் கணக்கில் தோற்கடித்த தன் மூலம் இறுதியாட்டத்திற்கு புத்ரா
பெர்வீரா குழு தேர்வானது.
எதிர்வரும் 20ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை இரவு 8.30 மணிக்கு சுபாங் ஜெயா,
அரேனா எம்.பி.எஸ்.ஜே. அரங்கில் நடைபெறும் இதன் இறுதியாட்டத்தில்
கிளானா யுனைடெட் குழுவை புத்ரா பெர்வீரா சந்திக்கவுள்ளது.
முற்றிலும் இந்திய விளையாட்டாளர்களைக் கொண்ட இக்குழு சிலாங்கூர்
லீக் போட்டியின் இறுதிச் சுற்றில் நுழைவது இதுவே முதன் முறையாகும்
என்று புத்ரா பெர்வீரா குழுவின் நிர்வாகியும் பயிற்றுநருமான ஆர்.எஸ்.
பிரகாஷ் கூறினார்.