காற்றில் பறந்த பள்ளியின் கூரை வீட்டில் விழுந்தது- மகாதேவி பரிதாப மரணம்

The roof of the school, which flew in the wind, fell on the house, Mahadevi died.

காற்றில் பறந்த பள்ளியின் கூரை வீட்டில் விழுந்தது- மகாதேவி பரிதாப மரணம்

ஜொகூர் பாரு,20 ஜூன் 2023-

இங்குள்ள செக் வா தேசிய
இடைநிலைப்பள்ளியின் கூரை காற்றில் பறந்து வீட்டின் மீது விழுந்ததில்
பெண்மணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்றிரவு நிகழ்ந்த இச்சம்பவத்தில் வி.மகாதேவி (வயது 55) என்ற அந்த
பெண்மணி சம்பவ இடத்திலேய மரணமடைந்ததைச் சுகாதார அமைச்சு
உறுதிப்படுத்தியதாகச் சிகாமாட் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின்
உதவி ஆணையர் முகமது ஹஷிம் அப்துல் ரசாக் கூறினார்.

நேற்றிரவு 7.41 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து
ஐவர் கொண்ட தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக
அவர் சொன்னார்.

சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள பள்ளியின் 5,400 சதுர அடி பரப்பளவிலான
கூரை காற்றில் பெயர்ந்து அவ்வீட்டின் மீது விழுந்துள்ளதை தாங்கள்
கண்டதாக அவர் குறிப்பிட்டார்,