கோல சிலாங்கூர் வட்டார தமிழ்ப் பள்ளியில் மாணவர்கள் பதிவு சரிவு...டத்தோ ஸ்ரீ டாக்டர் சூல்கிப்லி அமாட்

Datuk Si Dr,Zulkifli Amad

கோல சிலாங்கூர் வட்டார  தமிழ்ப் பள்ளியில் மாணவர்கள்  பதிவு சரிவு...டத்தோ ஸ்ரீ டாக்டர் சூல்கிப்லி அமாட்

கோல சிலாங்கூர்.ஏப்.7- கோல சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் இந்திய மாணவர்கள் பதிவு சரிவு கண்டுள்ளது. இதை இந்தியச் சமூகம் உணர வேண்டுகிறேன்.

அதே வேளையில் இந்தியச் சமுதாயத் தலைவர்கள் தமிழ் பள்ளிகளை தொடர்ந்து கட்டிக் காக்கவும் மாணவர் சரிவைக் கலையவும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ டாக்டர்  சூல்கிப்லி அமாட் அறைகூவல் விடுத்தார்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு கோல சிலாங்கூர் வட்டாரத்தில் தங்கும் விடுதியில் கவிஞர் எம். கருணாகரனின்  ” *உள்ளங்கைக் கடவுளும் அஜந்தா பேரழகியும்* ” என்ற புதுக் கவிதை நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடை பெற்றது.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கணிசமான தொகை கொடுத்து நூல்  வாங்கியும் சிறப்பித்ததுடன், அத்தொகைக்கு ஈடான  கவிதை நூல்களை, தனது நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு இலவசமாக கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்.