கருணைக்கோர் கலைஇரவு
show time
06 Sept 2023
வரும் செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி 2023 கோலாலம்பூர் கல்வி புத்தாக்க ஆன்மா இயக்கம் - கோலாலம்பூர் செத்தியாவங்சா இந்தியர் மேம்பாட்டுக் கழகம் இணைந்து கருணைக்கொரு கலை இரவு எனும் சொக்க வைக்கும் பழம்பாடல்கள் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது.
தலைநகர் டான்ஶ்ரீ சோமா பேரரங்கத்தில் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் 20 மாணவர் செல்வங்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது.
ம.இ.கா. தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சொல்வேந்தர் டத்தோஶ்ரீ டாக்டர் மு.சரவணன் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்கிறார்.
கூட்டரசுப் பிரதேச மாநில ம.இ.கா. தலைவர் டத்தோ இராஜா சைமன், தே.நி.நி.கூட்டுறவு சங்கத் தலைமை நிர்வாக இயக்குநர் டத்தோ பி.சகாதேவன் இருவரும் சிறப்பு வருகை புரிகின்றனர்.
தாங்கள் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிற்ப்பிக்குமாறு வேண்டுகின்றோம்.
நன்றி.
அன்புடன்,
இரா.கிருஷ்ணமூர்த்தி
017-2575515



ganapathy







\
